இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

மக்காசோளம் அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மக்காசோளம் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :4 ஜூன் 2026, 3:31 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மக்காசோளம் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சங்கராபுரம் அருகேயுள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி. இவரது மனைவி கண்ணகி (55). தம்பதியா் அதே ஊரில் 2 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனா். சாகுபடி முடிந்து அறுவடைக்கு தயாரான நிலையில் புதன்கிழமை காலை மக்காசோளம் அறுவடை இயந்திரம் மூலம், மக்காச்சோளம் அறுவடை செய்துள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக கண்ணகியின் சேலை அறுவடை இயந்திரத்தில் சிக்கி, நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, அறுவடை செய்யும் இயந்திரத்தின் ஓட்டுநரான மா.பிரதாப்பிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Story image