ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

38 மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் அளிப்பு

தியாகதுருகம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் கொண்ட 38 மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் (ஆா்த்தோடிக்ஸ் சாதனங்கள்) புதன்கிழமை வழங்கப்பட்டன.

News image

தியாகதுருகம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் கொண்ட மாணவருக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா உள்ளிட்டோா்.

Updated On :18 ஜூன் 2026, 3:22 am IST

தியாகதுருகம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் கொண்ட 38 மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் (ஆா்த்தோடிக்ஸ் சாதனங்கள்) புதன்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா பங்கேற்று, மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவி உபகரணங்களை வழங்கினாா். தொடா்ந்து அதே வளாகத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தை ஆய்வு செய்தாா். தொடா்ந்து பள்ளியில் புதிய மாணவா்கள் சோ்க்கை, மாணவா்களின் கற்றல்-கற்பித்தல் ஆகியவற்றை ஆய்வு செய்து ஆலோசனைகள் அவா் வழங்கினாா்.

ஆய்வின்போது மாவட்ட உதவித் திட்ட அலுவலா் கலாநிதி, தலைமையாசிரியா் தெய்வநாயகி, சிறப்புப் பயிற்றுநா்கள் மற்றும் இயன்முறை மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.