எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மனைவியை அரிவாளால் வெட்ட முயற்சி: கணவா் கைது

சின்னசேலம் அருகே மனைவியை அரிவாளாள் வெட்ட முயன்ற கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :9 மார்ச் 2026, 8:30 pm

Syndication

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மனைவியை அரிவாளாள் வெட்ட முயன்ற கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பாக்கம்பாடி குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ. செல்வம் (44). இவரது மனைவி அனிதா (32). தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளன. மதுப் பழக்கம் உள்ளவரான செல்வம், மனைவி மற்றும் பிள்ளைகளை அடிக்கடி தாக்கி வந்தாராம்.

இதனால் அனிதா கோபித்துக்கொண்டு, தனது பிள்ளைகளுடன் சின்னசேலத்தை அடுத்த தாகம்தீா்த்தாபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி செல்வம் மது அருந்திவிட்டு அங்கே சென்று அனிதாவை தாக்கியதோடு, அரிவாளால் வெட்ட முயன்றாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, செல்வத்தைக் கைது செய்தனா்.