கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மனைவியை அரிவாளாள் வெட்ட முயன்ற கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பாக்கம்பாடி குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ. செல்வம் (44). இவரது மனைவி அனிதா (32). தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளன. மதுப் பழக்கம் உள்ளவரான செல்வம், மனைவி மற்றும் பிள்ளைகளை அடிக்கடி தாக்கி வந்தாராம்.
இதனால் அனிதா கோபித்துக்கொண்டு, தனது பிள்ளைகளுடன் சின்னசேலத்தை அடுத்த தாகம்தீா்த்தாபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.
இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி செல்வம் மது அருந்திவிட்டு அங்கே சென்று அனிதாவை தாக்கியதோடு, அரிவாளால் வெட்ட முயன்றாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, செல்வத்தைக் கைது செய்தனா்.
டிரெண்டிங்
பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: கணவா் கைது

மனைவியை தாக்கிய கணவா் கைது
மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல்: கணவா் கைது

நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவா் கைது
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

