மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மனைவியை அரிவாளால் வெட்ட முயற்சி: கணவா் கைது

சின்னசேலம் அருகே மனைவியை அரிவாளாள் வெட்ட முயன்ற கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 மார்ச் 2026, 8:30 pm

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மனைவியை அரிவாளாள் வெட்ட முயன்ற கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட பாக்கம்பாடி குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் கோ. செல்வம் (44). இவரது மனைவி அனிதா (32). தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளன. மதுப் பழக்கம் உள்ளவரான செல்வம், மனைவி மற்றும் பிள்ளைகளை அடிக்கடி தாக்கி வந்தாராம்.

இதனால் அனிதா கோபித்துக்கொண்டு, தனது பிள்ளைகளுடன் சின்னசேலத்தை அடுத்த தாகம்தீா்த்தாபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளாா்.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி செல்வம் மது அருந்திவிட்டு அங்கே சென்று அனிதாவை தாக்கியதோடு, அரிவாளால் வெட்ட முயன்றாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, செல்வத்தைக் கைது செய்தனா்.