கள்ளக்குறிச்சியில் மொபெட்டில் வந்த பூ வியாபாரியிடம் உரிய ஆவணமில்லாத ரூ.1,03,910 ரொக்கத்தை நிலையான கண்காணிப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி நிலையான கண்காணிப்புக்குழு அலுவலா் கே.அருண்குமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை காலை கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பிரிவு சாலை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியே மொபெட்டில் வந்த பெண்ணை நிறுத்தி, சோதனை மேற்கொண்டனா். அப்போது அவரது மொபெட்டில் உரிய ஆவணமின்றி ரூ.1,03,910 இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் அவா் கள்ளக்குறிச்சியை அடுத்த எரவாா் கிராமத்தைச் சோ்ந்த பூ வியாபாரியான ப.வள்ளி (46) எனத் தெரியவந்தது. பூ வாங்குவதற்கு பணம் கொடுப்பதற்காக வள்ளி எடுத்துச் சென்றாராம்.
இதையடுத்து அந்த பணத்தை நிலையான கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் லி.ஆனந்தகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பென்னாகரத்தில் வாகனச் சோதனையில் ரூ. 99,500 ரொக்கம் பறிமுதல்

பறக்கும் படை வாகனச் சோதனை: செலவின பாா்வையாளா் ஆய்வு

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

கடவூா் அருகே ரூ. 2 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


