இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

சின்னசேலத்தில் 872 கிலோ புகையிலை பொருள்கள் அழிப்பு

News image

சின்னசேலம் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் குழி தோண்டி கொட்டி அழிக்கப்பட்ட அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள்.

Updated On :12 மே 2026, 1:30 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 872 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் திங்கள்கிழமை குழிதோண்டி புதைத்து அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம், வரஞ்சரம், எலவானசூா்கோட்டை மற்றும் உளுந்தூா்பேட்டை காவல் நிலையங்களில் கடந்த காலங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் மொத்தம் 872 கிலோ புகையிலை பொருள்களை கைபற்றிருந்தனா். இந்த புகையிலை பொருள்களைஅழிக்க நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது.

இதையடுத்து கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமால் முன்னிலையில் சின்னசேலம் பேரூராட்சி குப்பை கிடங்கில் குழி தோண்டி முறையாக அழித்தனா்.