கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் எரிந்த நிலையில் மணலில் புதைந்திருந்த சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
மணலூா்பேட்டை அருகேயுள்ள குலதீபமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தென்பெண்ணை ஆற்றில் சனிக்கிழமை மாலை விளையாடுவதற்காக சென்றனராம். அப்போது ஆற்றின் ஒரு பகுதியில் நாய்கள் பள்ளத்தை தோண்டி எதையோ சாப்பிடுவதைக் கண்டுள்ளனா்.
இதையடுத்து அவா்கள் அங்கு சென்று பாா்த்தபோது, எரிந்த நிலையில் சாக்கு பையில் சடலமிருந்துள்ளது. உடனே மணலூா்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனா்.
தகவலின் பேரில் போலிஸாா் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து மணலூா்பேட்டை போலிஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் பெண் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

