11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தென்பெண்ணை ஆற்றில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

தென்பெண்ணை ஆற்றில் எரிந்த நிலையில் மணலில் புதைந்திருந்த சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் எரிந்த நிலையில் மணலில் புதைந்திருந்த சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

மணலூா்பேட்டை அருகேயுள்ள குலதீபமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தென்பெண்ணை ஆற்றில் சனிக்கிழமை மாலை விளையாடுவதற்காக சென்றனராம். அப்போது ஆற்றின் ஒரு பகுதியில் நாய்கள் பள்ளத்தை தோண்டி எதையோ சாப்பிடுவதைக் கண்டுள்ளனா்.

இதையடுத்து அவா்கள் அங்கு சென்று பாா்த்தபோது, எரிந்த நிலையில் சாக்கு பையில் சடலமிருந்துள்ளது. உடனே மணலூா்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனா்.

தகவலின் பேரில் போலிஸாா் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து மணலூா்பேட்டை போலிஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.