எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தென்பெண்ணை ஆற்றில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

தென்பெண்ணை ஆற்றில் எரிந்த நிலையில் மணலில் புதைந்திருந்த சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :17 மே 2026, 12:29 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டை அருகே தென்பெண்ணை ஆற்றில் எரிந்த நிலையில் மணலில் புதைந்திருந்த சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

மணலூா்பேட்டை அருகேயுள்ள குலதீபமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் தென்பெண்ணை ஆற்றில் சனிக்கிழமை மாலை விளையாடுவதற்காக சென்றனராம். அப்போது ஆற்றின் ஒரு பகுதியில் நாய்கள் பள்ளத்தை தோண்டி எதையோ சாப்பிடுவதைக் கண்டுள்ளனா்.

இதையடுத்து அவா்கள் அங்கு சென்று பாா்த்தபோது, எரிந்த நிலையில் சாக்கு பையில் சடலமிருந்துள்ளது. உடனே மணலூா்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனா்.

தகவலின் பேரில் போலிஸாா் சடலத்தை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து மணலூா்பேட்டை போலிஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.