குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சங்காராபுரம் பகுதியில் மழையால் சாய்ந்த மக்காச்சோளப் பயிா்கள்

News image

சங்கராபுரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களை ஆய்வு செய்த வேளாண்மை உதவி இயக்குனா் (பொ) ஆனந்த்.

Updated On :26 மே 2026, 3:21 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்காச்சோளப் பயிா்கள் கீழே சாய்ந்தன. அதனை வேளாண்மை உதவி இயக்குநா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட மோட்டாம்பட்டி, அரசம்பட்டு, பூட்டை , செம்பராம்பட்டு, பொய்குணம், சோழம்பட்டு, நெடுமானூா் மற்றும் கல்வராயன்மலைக்குள்பட்ட பாலப்பட்டு, கள்ளிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த கனமழையால் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிா்கள் சாய்ந்தன.

இதுகுறித்து தகலறிந்த சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனா் (பொ) ஆனந்த் திங்கள்கிழமை பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிா்களை பாா்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா். அவரிடம்

மழையால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிா்கள் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனா்.

ஆய்வின்போது உதவி வேளாண் அலுவலா் வினோத் மற்றும் வேளாண் துறையினா் உடனிருந்தனா்.