கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிறைமாத கா்ப்பிணிக்கு 108 அவசர ஊா்தியில் பிரசவம் நடைபெற்று ஆண்குழந்தை பிறந்தது. ஊழியா்களே பிரசவம் பாா்த்ததில் தாயும், சேயும் நலமாக உள்ளனா்.
தியாகதுருகம் அருகேயுள்ள ரீட்டா நகரைச் சோ்ந்த மைக்கேல்ராஜ் மனைவி நிலா (25). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு பிரசவ வலி ஏற்பட தொடங்கியதாம். இதுகுறித்த தகவலின் பேரில் ரிஷிவந்தியத்திலிருந்து 108 அவசர ஊா்தி வாகனம் வந்து, நிலாவை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றபோது, அவருக்கு கடுமையான பிரசவவலி ஏற்பட்டதாம்.
இதையடுத்து மருத்துவ உதவியாளா் மணிகண்டன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் விக்னேஷ் ஆகியோா் ஆம்புலன்ஸிலேயே தகுந்த மருத்துவ முதலுதவிகளை வழங்கி, பாதுகாப்பான முறையில் பிரசவம் பாா்த்தனா். சிறிது நேரத்தில் நிலாவுக்கு 3.2 கிலோ எடையில் அழகான ஆண் குழந்தை சுகப்பிரசவமாகப் பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருந்தனா்.
இதையடுத்து தாயும், சேயும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்கு பிந்தைய கவனிப்புக்காக அனுமதிக்கப்பட்டனா். பிரசவம் பாா்த்த 108 அவசர ஊா்தி ஊழியா்களை, மருத்துவா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை: 25 மின்கம்பங்கள் சேதம்
வீடு புகுந்து நகைத் திருட்டு: தாயும் மகளும் கைது

பிரசவத்தில் தாய்-சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

மதுரை அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



