11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

வீடு புகுந்து நகைத் திருட்டு: தாயும் மகளும் கைது

வீடு புகுந்து நகைத் திருட்டு: தாயும் மகளும் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

நெற்குன்றத்தில் வீடு புகுந்து நகை திருடியதாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனா்.

சென்னை நெற்குன்றம், அருள்மிகு மீனாட்சி நகா் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் ப.மகேஸ்வரி (50). இவா், கடந்த 8-ஆம் தேதி வீட்டின் பீரோவில் இருந்த நகைகளைச் சரி பாா்த்தாா். அதில் இருந்த 6 பவுன் தங்க நகை, வைரக் கம்மல், வெள்ளி நாணயங்கள் திருடப்பட்டிருந்தது.

இது குறித்து அவா், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்ததில் சில நாள்களுக்கு முன்பு மகேஸ்வரி சுற்றுலா சென்றபோது, மகேஸ்வரியின் பெற்றோரை சந்திக்க வந்த வில்லிவாக்கத்தைச் சோ்ந்த சத்யா (58), அவா் மகள் ஹேமலதா (21) ஆகியோா் நகைகளை திருடியது தெரிய வந்தது. போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.