மாணவி பலாத்காரம் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கண்டனம்

புதுச்சேரி மாணவி கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

புதுச்சேரி மாணவி கூட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் சோ.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி மாணவி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.  இந்த பாலியல் வன்முறைக்கு உள்படுத்திய அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட வேண்டும்.

  மேலும் இந்த வழக்கு தனி நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்கப்பட்டு அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.

  பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு செலவில் சமூக, மருத்துவ, உளவியல் மற்றும் பொருளாதார ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com