யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

கருணை அடிப்படையில் பணி: அரசுக்கு கோரிக்கை

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்களில் பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகங்களில் பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என புதுச்சேரி அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசுக்கு காரைக்கால் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளனத் தலைவர் கே.ஐயப்பன், பொதுச் செயலர் எம்.ஷேக் அலாவுதீன் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தி வெளியிட்ட அறிக்கை:

காரைக்கால் நகராட்சி, திருநள்ளார், நிரவி, நெடுங்காடு, திருபட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரிந்து கடந்த 2008-ஆம் ஆண்டும், அதற்கு பிறகும் பணியின்போது இறந்த 24 ஊழியர்களின் மனைவி, வாரிசுகளுக்கு, அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப குரூப் சி அல்லது கீழ்நிலை நிரந்தரப் பணி கேட்டு சம்பந்தப்பட்ட நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளிலிருந்து உள்ளாட்சித் துறைக்குக் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தற்போது, காரைக்கால் பகுதி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் ஏராளமான நிரந்தர, தினக்கூலி பதவிகள் காலியாக உள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இதைப் பயன்படுத்தி இறந்தவர் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.