8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

புதுச்சேரியில் ஸ்ரீஅரவிந்தர் பிறந்த நாள்

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தரின் 146-ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அரவிந்தரின் 146-ஆவது பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
 அரவிந்தர் கடந்த 15.1872-ல் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பிறந்தார். ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக, கடந்த 1910-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு வந்து ஆசிரமத்தை நிறுவினார்.
 பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த ஆசிரமத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அரவிந்தரின் பிறந்த நாள் விழா, ஆசிரமத்தில் ஆண்டுதோறும் ஆக.15-ஆம் தேதி கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி, ஆசிரமத்தில் புதன்கிழமை (ஆக.15) அரவிந்தரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
 இதையொட்டி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அரவிந்தரின் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்திருந்தனர். அரவிந்தர் ஆசிரமத்தில் அதிகாலை நடைபெற்ற சிறப்பு தியானத்தில் கலந்து கொண்டனர்.
 அரவிந்தர் மற்றும் அன்னை பயன்படுத்திய அறைகள், பொருள்கள் பக்தர்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இதனை தரிசித்தனர்.
 அரவிந்தர் பிறந்த நாளையெட்டி "ஆரோவில்' சர்வதேச மையத்தில் உள்ள மாத்திரி மந்திர் முன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து "போன் பயர்' எனப்படும் தீபோற்சவ தியானத்தில் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.