ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

வில்லியனூரில் சட்ட சேவைகள் சிறப்பு முகாம்

புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைந்து நடத்திய 5 - ஆவது சட்ட சேவைகள் சிறப்பு முகாம் வில்லியனூரில் அண்மையில் நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைந்து நடத்திய 5 - ஆவது சட்ட சேவைகள் சிறப்பு முகாம் வில்லியனூரில் அண்மையில் நடைபெற்றது.
இந்த முகாம் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரும், உச்சநீதிமன்ற நீதிபதியுமான மதன் பீமாராவ் லோகூர் உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய செயல் தலைவருமான மணிக்குமார் வழிகாட்டுதலின் படி,  வில்லியனூர் திருக்காமீஸ்வரர் நகரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. 
காலை முதல் மாலை வரை நடைபெற்ற முகாமில் வில்லியனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் 851 பேர் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தனர். பல்வேறு அதிகாரிகள் தங்கள் துறையால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்துப் பேசினர்.  முகாமில் புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனா தேவி மற்றும் சட்டப்பணிகள் ஆணையத்தின் பட்டியல் வழக்குரைஞர்கள், ஆணைய அலுவலர்கள், சட்டத் தன்னார்வலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.