புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

புதுச்சேரி ஆசிரமத்தில் அன்னை பிறந்த நாள் விழா 

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஸ்ரீ அன்னையின் பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:04 am

தினமணி

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஸ்ரீ அன்னையின் பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
 புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் சர்வதேச நகரை அமைத்தவர் அன்னை மிர்ரா. இவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் 21.2.1878-ல் பிறந்தார். அன்னையின் இயற்பெயர் மிர்ரா அன்போன்ஸா ஆகும். சிறிய வயதிலேயே கல்வியில் சிறந்து விளங்கிய அன்னை, அரவிந்தரின் ஆன்மிக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1914-இல் புதுச்சேரி வந்தார்.
 அன்னையின் முயற்சியால்தான், அரவிந்தர் ஆசிரமும், ஆரோவில் சர்வதேச நகரமும் தோற்றுவிக்கப்பட்டது.
 அன்னையின் 140-ஆவது பிறந்த நாளையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அன்னை வசித்த அறை பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது. இதை அவரது சீடர்கள் ஏரளாமானோர் பார்த்துச் சென்றனர்.
 மேலும், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னை சமாதியை பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பின்னர் தியானமும் மேற்கொண்டனர்.
 அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.