மத்திய அரசின் இளைஞர் நல மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நேரு இளையோர் மையம், உருவையாறு காமராஜர் மக்கள் பணி இயக்கம் ஆகியவை சார்பில் சர்வதேச யோகா தினம், இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி, காமராஜர் பிறந்த நாள் விழா ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
உருவையாறு கலையரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு புதுச்சேரி மாவட்ட நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ராணி தலைமை வகித்தார். யோகா பேராசிரியர் திருநாவுக்கரசு, யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
முன்னதாக அரசுப் பள்ளியில் வைத்து யோகா செய்வது பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் பங்கேற்று யோகாவில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், காமராஜர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
மேலும், பெண்களுக்கான கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் அவர் பரிசு வழங்கினார். விழாவில் காமராஜர் நற்பணி மன்றத் தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 6 - நேரலை!

மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம்: காங்கிரஸ்

ராஜஸ்தான் அமைச்சரின் மகனுக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

இலங்கைக்கு எதிராக டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி?
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


