மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நேரு இளையோர் மைய முப்பெரும் விழா

மத்திய அரசின் இளைஞர் நல மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நேரு இளையோர் மையம், உருவையாறு காமராஜர் மக்கள் பணி இயக்கம் ஆகியவை சார்பில் சர்வதேச யோகா தினம், இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி, காமராஜர்

Updated On :23 ஜூலை 2018, 9:47 am IST

மத்திய அரசின் இளைஞர் நல மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் நேரு இளையோர் மையம், உருவையாறு காமராஜர் மக்கள் பணி இயக்கம் ஆகியவை சார்பில் சர்வதேச யோகா தினம், இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி, காமராஜர் பிறந்த நாள் விழா ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.
உருவையாறு கலையரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு புதுச்சேரி மாவட்ட நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் ஹெலன் ராணி தலைமை வகித்தார். யோகா பேராசிரியர் திருநாவுக்கரசு, யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி எடுத்துரைத்தார். 
முன்னதாக அரசுப் பள்ளியில் வைத்து யோகா செய்வது பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் பங்கேற்று யோகாவில் பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், காமராஜர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். 
மேலும், பெண்களுக்கான கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் அவர் பரிசு வழங்கினார். விழாவில் காமராஜர் நற்பணி மன்றத் தலைவர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.