தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 9:45 am IST

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாவேந்தர் பாரதிதாசனாரின் மகன் மன்னர் மன்னன். தமிழறிஞரான இவர் கலை, இலக்கியம், சமுதாயம் உள்ளிட்ட பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு 75 ஆண்டுகள் ஆகின்றன. 
இதனைக் கொண்டாடும் வகையில், "75 ஆண்டுகள் மன்னர் மன்னன் பொதுவாழ்க்கைப் புகழ்விழா' புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் வரும் செப்டம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மன்னர் மன்னன் வாழ்வியல் வண்ணங்கள் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த ஓவியப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு மன்னர் மன்னனின் தோற்றம், பல்வேறு பணிகள் குறித்த 12 தலைப்புகள் கொடுக்கப்பட்டன. 
இந்தத் தலைப்புகளில் புதுச்சேரி, காரைக்கால், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று ஓவியம் வரைந்தனர். 
பாரதிதாசன் அறக்கட்டளைத் தலைவர் பாரதி விழாவுக்கு தலைமை வகித்து போட்டியை தொடக்கிவைத்தார். போட்டி தொடர்பாக அவர் கூறுகையில், "பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் வாழ்க்கையையும், அவர்களது படைப்புகளையும் நன்கறிந்து உலகுக்கு அளித்தவர் மன்னர் மன்னன். அவருடைய சிறப்புகளை மாணவர்கள் நன்கு அறிய, கலைத்துறை வாயிலான நிகழ்வுகளை பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தி வருகிறது என்றார்.
ஓவியப் போட்டியில் 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிறந்த 15 ஓவியங்களை வரைந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன. 
பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.