40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

புதுச்சேரியில் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் 

புதுச்சேரியில் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்று புதுவை பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்க (ஏஐடியூசி) பேரவை வலியுறுத்தியுள்ளது.

Updated On :23 ஜூலை 2018, 9:45 am IST

புதுச்சேரியில் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்று புதுவை பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்க (ஏஐடியூசி) பேரவை வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பேரவையின் கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரவைத் தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் அபிஷேகம் நடைபெற்ற வேலைகள், எதிர்கால கடமைகள் குறித்துப் பேசினார்.
ஏஐடியூசி பொதுச்செயலாளர் தினேஷ் பொன்னையா, செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் பேசினர். பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்க பொருளாளர் தேசிகன், துணைத் தலைவர்கள் பூபதி, கேசவன், ஏழுமலை, பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள் விவரம்: புதுச்சேரியில் உள்ள ஏஎப்டி, சுதேசி, பாரதி ஆகிய 3 பஞ்சாலைகளை புனரமைப்பு செய்ய ரூ.500 கோடியை மானியமாக மத்திய அரசு வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்க இந்த 3 ஆலைகளையும் இணைத்து ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சார்பு துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை, பள்ளி சீருடை, ஏழைகளுக்கான இலவச துணி வகைகள், ராணுவ சீருடை, போலீஸ் சீருடை அனைத்தையும் ஏஎப்டி பஞ்சாலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 ஆலைகளிலும் பணியாற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணிக்கொடை மற்றும் வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.