புதுச்சேரியில் ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும் என்று புதுவை பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்க (ஏஐடியூசி) பேரவை வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பேரவையின் கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள ஏஐடியூசி தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரவைத் தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் அபிஷேகம் நடைபெற்ற வேலைகள், எதிர்கால கடமைகள் குறித்துப் பேசினார்.
ஏஐடியூசி பொதுச்செயலாளர் தினேஷ் பொன்னையா, செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் பேசினர். பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்க பொருளாளர் தேசிகன், துணைத் தலைவர்கள் பூபதி, கேசவன், ஏழுமலை, பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள் விவரம்: புதுச்சேரியில் உள்ள ஏஎப்டி, சுதேசி, பாரதி ஆகிய 3 பஞ்சாலைகளை புனரமைப்பு செய்ய ரூ.500 கோடியை மானியமாக மத்திய அரசு வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை அதிகரிக்க இந்த 3 ஆலைகளையும் இணைத்து ஜவுளிப் பூங்கா அமைக்க வேண்டும். அரசு மற்றும் அரசு சார்பு துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை, பள்ளி சீருடை, ஏழைகளுக்கான இலவச துணி வகைகள், ராணுவ சீருடை, போலீஸ் சீருடை அனைத்தையும் ஏஎப்டி பஞ்சாலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 ஆலைகளிலும் பணியாற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பணிக்கொடை மற்றும் வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!
மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிக்கலாம் என்ற அச்சம்: பெங்களூருக்கு அழைத்து வரப்பட்ட ம.பி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

இந்தியாவிலிருந்து மாம்பழ இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: நேபாளம்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


