9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

நீட் தேர்வு: அமலோற்பவம் பள்ளி சிறப்பிடம்

நீட் தேர்வில் புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

Updated On :7 ஜூன் 2018, 8:54 am IST

நீட் தேர்வில் புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
 புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி நீட் தேர்வுக்கு ஆகாஷ் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி அளித்து வருகிறது. அதில் இந்த ஆண்டு பயிற்சி பெற்ற 113 பேரில் 90-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றனர். இதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துசாமி தலைமை வகித்தார்.
 தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 455 மதிப்பெண் எடுத்த மாணவர் பிரசாந்துக்கு ஒரு பவுன் தங்கம், 452 மதிப்பெண் எடுத்த மாணவர் விக்னேஷ்வருக்கு அரை பவுன் தங்கத்தை முதுநிலை முதல்வர் லூர்துசாமி வழங்கினார். மேலும், நீட் தேர்வில் 150 வரை மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனிப்புகளையும் பரிசாக அவர் வழங்கினார்.
 கடந்த ஆண்டு இங்கு பயிற்சி பெற்ற மாணவர்களில் 90-க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக பாட திட்டத்தில் பயின்ற மாணவர்களில் ஒருவர் 455 மதிப்பெண்ணும், மற்றொரு மாணவர் 452 மதிப்பெண்ணும் எடுத்துள்ளதாக முதுநிலை முதல்வர் லூர்துசாமி தெரிவித்தார்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.