40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சரவெடிகள் வெடிக்க தீயணைப்புத் துறை தடை

புதுவையில் சரவெடிகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக புதுவை கோட்டத் தீயணைப்புத் துறை அதிகாரி இளங்கோ தெரிவித்தார்.

News image
Updated On :5 நவம்பர் 2018, 8:55 am IST

புதுவையில் சரவெடிகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக புதுவை கோட்டத் தீயணைப்புத் துறை அதிகாரி இளங்கோ தெரிவித்தார்.
 இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உயரே சென்று வெடிக்கும் ராக்கெட், அவுட் போன்ற பட்டாசுகள், சீனப் பட்டாசுகள் விற்கத் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசுகளை நடு வீதியில் வைத்து வெடிக்கக் கூடாது. சிறுவர்கள் பட்டாசுகளை வெடிக்கும் போது பெரியவர்களும் உடனிருப்பது பாதுகாப்பானது. பட்டாசு அருகே புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
 வெடிக்காத, புகைந்து போன பட்டாசுகளை நீண்ட குச்சிகளைக் கொண்டு அப்புறத்தப்படுத்த வேண்டும்.
 குழந்தைகள் பருத்தி ஆடைகள், காலணிகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குடிசைப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சரவெடிகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 வியாபாரிகளுக்கான விதிமுறைகள்: எளிதில் பற்றி எரியக் கூடிய மூலப் பொருள்களால் தயாரிக்கப்படும் சீனத் தயாரிப்பு பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. அனுமதி பெற்ற வியாபாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வாங்கி வைத்திருக்கவோ, விற்கவோ கூடாது. அளவுக்கு அதிகமான பட்டாசுகளை வைத்திருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 சிறுவர்களைப் பட்டாசு வியாபாரத்தில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தராசு, இரும்பிலான பொருள்களைக் கொண்டு பட்டாசுகளைக் கையாளக் கூடாது. பட்டாசுகளை வைத்திருப்பவர்கள் தங்களது கடைகளில் போதுமான தண்ணீரை பேரலில் நிரப்பி வைக்க வேண்டும். பட்டாசு கடை அலங்காரத்துக்கு மின்சார சீரியல் வகை பல்புகளை பயன்படுத்தக் கூடாது.
 பட்டாசு கடைகளுக்கு எதிரில் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கக் கூடாது. தீயணைப்புத் துறை சிபாரிசு செய்த தீயணைப்பு சாதனங்களை சரியான முறையில் வைத்து பராமரிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.