புதுவை பல்கலை.யில் 25 சதவீத இட ஒதுக்கீடு தேவை என சமூக நீதிப் பேரவை வலியுறுத்தியது.
இதுதொடர்பாக அதன் நிறுவனர் ஆர்.விசுவநாதன், தலைவர் டி.என்.தனராமன், ஒருங்கிணைப்பாளர் து.கீதநாதன் ஆகியோர் புதுவை ஆளுநருக்கு அண்மையில் அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
புதுவை பல்கலைக்கழகம் புதுச்சேரி மக்களால் நிலம் வழங்கி உருவாக்கப்பட்டதாகும். புதுவை அரசும் மாநில மக்களின் நலன் சார்ந்து மின்சாரம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பல்கலைக்கழகத்துக்கு வழங்கியுள்ளது. குறிப்பாக, இந்தப் பல்கலைக்கழகம் புதுச்சேரி மாணவர்களின் சமூக நலன், கல்வி மேம்பாட்டுக்காக சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், பல்கலை.யில் வழங்கப்பட்டு வந்த புதுச்சேரி மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாதென பல்கலைக்கழக துணைவேந்தரான நீங்கள் அறிவித்துள்ளீர்கள். இந்த அறிவிப்பானது சமூக நீதிக்கு எதிரானதாகும். மேலும், புதுச்சேரி மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
எனவே, கடந்த காலத்தில் எப்படி புதுவை மத்திய பல்கலைக்கழகம் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதோ, அது தொடர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு

புத்த பூா்ணிமா: குடியரசு துணைத் தலைவா், உள்துறை அமைச்சா் வாழ்த்து!

திருச்சானூா் வருடாந்திர வசந்தோற்சவம் 2-ஆம் நாள்: தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு!
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: 23 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

