புதுவை மாநிலம், பாகூரில் பால் வியாபாரியைத் தாக்கிய இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
பாகூர் குருவிநத்தம் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் மணி (30). பால் வியாபாரி. சனிக்கிழமை இரவு பால் வியாபாரத்தை முடித்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் குருவிநத்தம் தூக்குப்பாலம் வழியாக வீட்டுக்குச் சென்றார்.
அப்போது அந்த வழியாக வேகமாகச் சென்ற காரிலிருந்து இறங்கியவர்கள், மணியிடம் ஏன் வேகமாகச் செல்கிறாய் எனக் கேட்டு தகராறு செய்தனர்.
தொடர்ந்து, காரில் வந்த குருவிநத்தம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த நடராஜ் (24), அவரது நண்பர் ரஞ்சித் (23) இருவரும் மணியை திட்டி கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அரிவாளால் அவரை வெட்ட முயன்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த மணி, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸார் வழக்குப் பதிந்து நடராஜை கைது செய்தனர். ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெண் கொலை: இளைஞா் கைது

இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையில்லை! நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்
திரைக் கதிர்
26 ஆண்டுகள் நிறைவு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
