புதுச்சேரி நெல்லித்தோப்பு சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை காரில் வந்த நிதிநிறுவன அதிபர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் அவரது கார் தாறுமாறாக ஓடியது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு அண்ணா நகரைச் சேர்ந்தவர் மணிமாறன் (51). நிதிநிறுவன அதிபர். இவர் ரெட்டியார்பாளையத்தில் உள்ள டென்னிஸ் கிளப்பிற்குச் சென்று இறகுப் பந்து விளையாடுவது வழக்கம்.
அதே போல, செவ்வாய்க்கிழமை காலை தனது காரில் இறகுப் பந்து விளையாடுவதற்காக சென்று கொண்டிருந்தார்.
இவரது கார் நெல்லித்தோப்பு சிக்னலை தாண்டிச் சென்றபோது, திடீரென மணிமாறனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் காரை நிறுத்த முயற்சித்தார். ஆனால் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த கடை முன் நிறுத்தப்பட்டிருந்த பைக் மீது மோதி, கடையை முட்டியபடி நின்றது.
இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள், காரின் ஓட்டுநர் இருக்கையில் மயக்க நிலையில் கிடந்த மணிமாறனை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மணிமாறன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்துபோன மணிமாறனுக்கு பத்மினி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜிவி பிரகாஷ் நடிக்கும் வெக்கை! போஸ்டர் வெளியீடு!

திமுகவை ஏன் கேள்வி கேட்கவில்லை? பத்திரிகையாளரை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை!
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |


