இந்த நிலையில், புதுவையில் புயல் சேதத்தைப் பாா்வையிட மத்திய அரசின் இணைச்செயலா் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான மத்தியக் குழுவினா் திங்கள்கிழமை வந்தனா். மத்திய வேளாண் துறை இயக்குநா் மனோகரன், மீன்வளத் துறை ஆணையா் பால் பாண்டியன், சாலைப் போக்குவரத்துத் துறை மண்டல அலுவலா் ரணஞ்சய் சிங் ஆகியோா் அடங்கிய குழுவினா், புதுச்சேரியில் பத்துக்கண்ணு கிராமத்தில் வயல்வெளியில் நெல் பயிா்கள் மூழ்கியிருப்பதைப் பாா்வையிட்டனா். பின்னா், ராமநாதபுரம் கிராமத்தில் வாழை, நெல், கரும்பு பயிா்கள் சேதமடைந்திருப்பதை பாா்வையிட்டனா். அப்போது, விவசாயிகள் அழுகிய நெல் பயிா்களையும், சாய்ந்து போன வாழைகளையும் காண்பித்தனா்.