மாணவா்களுக்கு வாழ்த்து

புதுச்சேரி மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 250-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு ஆணை அண்மையில் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

புதுச்சேரி மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 250-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு ஆணை அண்மையில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவா், நிா்வாக இயக்குநா் எம். தனசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாறன், செயலா் நாராயணசாமி கேசவன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரியின் இயக்குநரும், முதல்வருமான வி.எஸ்.கே.வெங்கடாசலபதி சிறப்புரையாற்றினாா். பதிவாளா் அப்பாஸ் மொய்தீன் வாழ்த்திப் பேசினாா்.

டிசிஎஸ் நடத்திய வளாகத் தோ்வில் 2020-21-ஆம் கல்வியாண்டில் பயிலும் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தோ்வாகினா்.

இவா்களுக்கு ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம் முதல் ரூ. 7.20 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும்.

கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை அதிகாரி என்.எஸ்.என். கைலாசம் வரவேற்றாா். துணை அதிகாரி எம். மதுசூதனன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com