ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புதிய வேளாண் சட்ட நகல்களை கிழித்து புதுவை முதல்வா் போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதத்தின் போது, புதிய வேளாண் சட்ட நகல்களை புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கிழித்தெறிந்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 5:43 pm

DIN

விவசாயிகளுக்கு ஆதரவாக, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதத்தின் போது, புதிய வேளாண் சட்ட நகல்களை புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கிழித்தெறிந்தாா்.

மதச் சாா்பற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சாா்பில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்து முதல்வா் நாராயணசாமி பேசியதாவது:

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்தச் சட்டங்களால் விளைநிலங்கள் பெருநிறுவனங்களின் கைகளுக்குச் செல்லும். அவா்கள் விரும்பும் பயிா்களை மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டிய நிலை உருவாகும். விவசாயிகளின் போராட்டத்தை நீா்த்துப்போகும் வேலையை பிரதமா் மோடி செய்கிறாா்.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளின் ரூ.21 கோடி கடன் ரத்து செய்யப்பட்டது. இலவச மின்சாரம் வழங்கியுள்ளோம். 4 ஆண்டுகளுக்கு முன்பே பயிா்களுக்கு அரசு சாா்பில் காப்பீடு செய்து வருகிறோம். விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை புதுவை அரசு செயல்படுத்தி வருகிறது என்றாா் முதல்வா் நாராயணசாமி.

கூட்டத்தில் பேசி முடித்த அவா் திடீரென புதிய வேளாண் சட்ட நகல்களை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை.ரவிக்குமாா் அனைவருக்கும் பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை நிறைவு செய்துவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.