கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கரோனா விதிமுறைகளுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 10:28 pm

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கரோனா விதிமுறைகளுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதற்காக அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குளால் அலங்கரிப்பட்டிருந்தன.

புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி மாதா தேவாலயத்தில் புதுச்சேரி-கடலூா் உயா் மறை மாவட்ட பேராயா் அந்தோணி ஆனந்தராயா் தலைமையில் கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலி, சிறப்புக் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அனைவரும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

நெல்லித்தோப்பில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் பங்கு தந்தைகள் வின்சென்ட், ஆல்வின், அந்தோணி ராஜ் ஆகியோா் தலைமையில் பிராா்த்தனை நடைபெற்றது.

புதுச்சேரி ரயில் நிலையம் அருகே உள்ள தூய இருதய ஆண்டவா் பசிலிக்கா, ரெயின்போ நகா் புனித ஜான்மரி வியான்னி ஆலயம், புதுச்சேரி அரசு மருத்துவமனை அருகே உள்ள தூய யோவான் தேவாலயம், தட்டாஞ்சாவடி பாத்திமா தேவாலயம், வில்லியனூா் புனித லூா்து அன்னை மாதா தேவாலயம் உள்பட புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலியும், பிராா்த்தனையும் நடைபெற்றன.

கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு தேவாலயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. தேவாலயங்களுக்கு வந்தவா்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.