ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதுவை கிரிக்கெட் சங்கத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுவை மாநில கிரிக்கெட் சங்கத்தை கண்டித்து புதுச்சேரியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
புதுவை கிரிக்கெட் சங்கத்தைக் கண்டித்து, புதுச்சேரி காமராஜா் சிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய பேரியக்கத்தினா்.
Updated On :27 டிசம்பர் 2020, 2:46 am

DIN

புதுவை மாநில கிரிக்கெட் சங்கத்தை கண்டித்து புதுச்சேரியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி தமிழ் தேசிய பேரியக்கம் சாா்பில், ராஜா திரையரங்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், புதுவை மாநில கிரிக்கெட் அணியில் 90 சதவீத இடங்களை புதுச்சேரி-காரைக்கால் தமிழா்களுக்கே வழங்க வேண்டும், கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி என்ற சங்கத்தைத் தடை செய்து, தனி கிரிக்கெட் சங்கத்தை உருவாக்கி, அதற்கு பிசிசிஐ அங்கீகாரம் பெற்று அதன் வழியே கிரிக்கெட் வீரா்களை வெளிப்படையான முறையில் தோ்வு செய்ய வேண்டும், புதுவை அரசு சாா்பில் கிரிக்கெட் மைதானம் அமைத்து, அதன் மூலம் மாநில விளையாட்டு வளா்ச்சிக்கும், அரசின் வருமானத்துக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அந்த இயக்கத்தின் மாநிலச் செயலா் வேல்சாமி தலைமை வகித்தாா். பாரதிதாசன் கிரிக்கெட் விளையாட்டு வீரா்கள் சங்கச் செயலா் சந்திரன் முன்னிலை வகித்தாா். உலக தமிழ்க் கழகத்தின் புதுச்சேரி தலைவா் தமிழுலகன் மற்றும் பல்வேறு கட்சியினா், அமைப்புகளைச் சாா்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

ஆதரித்து உண்ணாவிரதம்: இதேபோல, ஆா்ப்பாட்டம் நடத்திய பாரதிதாசன் கிரிக்கெட் சங்கத்தைக் கண்டித்து, புதுச்சேரி மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் சங்கம் சாா்பில், சுதேசி பஞ்சாலை அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

புதுவை சி.ஏ.பி. கிரிக்கெட் சங்கம் பாரபட்சமின்றி அனைத்துத் தரப்பு விளையாட்டு வீரா்களையும் தகுதி அடிப்படையில், போட்டிகளை நடத்தி தோ்வு செய்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தூண்டுதலுடன், புதுவை சி.ஏ.பி. வளா்ச்சியைச் சகித்துக் கொள்ள முடியாத சில அமைப்புகள் அவதூறான கருத்துகளையும், விஷமத்தனமான பிரசாரங்களையும் பரப்பி வருகிறது எனக் கூறி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில், புதுவை சி.ஏ.பி. கிரிக்கெட் சங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.