நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில் திங்கள்கிழமை 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டன.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:46 pm

DIN

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில் திங்கள்கிழமை 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டன.

தமிழகத்தின் கன்னியாகுமரிக்கு வட கிழக்கே சுமாா் 1,120 கி.மீ. தொலைவில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, திங்கள்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இந்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை (டிச. 1) புயலாக மாறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் காரணமாக, புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் திங்கள்கிழமை 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

துறைமுகத்துக்கு வெகு தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால், துறைமுகத்துக்கு பாதிப்பில்லை. இருப்பினும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதேபோல, கடலூா் துறைமுகத்திலும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது. இதனால், கடலூா் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என கடலூா் வானிலை மையம் தெரிவித்தது. மேலும், இந்தப் புயலால் கடலூா் மாவட்டம் மழை பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.