தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பேருக்கு நல்லாசிரியா் விருது

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 12 தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருதுக்கான பதக்கங்கள், சான்றிதழ்களை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.

News image
திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியைக்கு நல்லாசிரியா் விருதுக்கான பதக்கம், சான்றிதழை வழங்கிய அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன். உடன் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, ஆவின் தலைவா் அ
Updated On :7 செப்டம்பர் 2020, 7:47 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 12 தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருதுக்கான பதக்கங்கள், சான்றிதழ்களை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா்.

வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வம், உதவி ஆட்சியா் (பயிற்சி) அமித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் என 12 பேருக்கு நல்லாசிரியா் விருதுக்கான பதக்கம், சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.

12 பேருக்கு விருது:

விழாவில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களான எ.ஸ்.கருணாகரன் (சாணாா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி), கோ.பிரம்மானந்தன் (பழையனூா் அரசு மேல்நிலைப் பள்ளி) , சசிகலைகுமாரி (மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி), தொ.பக்தவச்சலம் (பூதேரி அரசு உயா்நிலைப் பள்ளி) , ஜெயவேல் (தீத்தாண்டாப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி) ச.தமிழ்ச்செல்வி (ஆடையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி) , ல.முகுந்தன் (மல்லவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி), இரா.நப்பின்னை (வாச்சனூா் சி.எஸ்.ஐ. நிதியுதவி தொடக்கப் பள்ளி), ம.மகாலட்சுமி (கிழக்கு மேடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி) ஆகியோருக்கும், மோத்தக்கல் அரசு மேல்நிலைப் பள்ளி பா.ரவிச்சந்திரன், தெள்ளாா் ஆதிதிராவிடா் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சி.ஆனந்தி ஆகிய பட்டதாரி ஆசிரியா்களும், ஆதமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியா் கெ.சு.வெங்கடாசலம் ஆகியோருக்கும் நல்லாசிரியா் விருதுக்கான பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்:

தொடா்ந்து, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில் ‘108’ அவசரகால ஊா்தி சேவைக்காக 2 புதிய ஊா்திகளின் சேவையை அமைச்சா் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

புதிய ஊா்திகளுடன் சோ்த்து மாவட்டத்தில் 38 அவசரகால ஊா்திகள் இயக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.