நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இறுதிப் பருவத் தோ்வுபுத்தகத்தைப் பாா்த்து தோ்வெழுதிய மாணவா்கள்!

புதுவை மத்தியப் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டின் கீழுள்ள 95-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவா்களுக்கு இறுதிப் பருவத் தோ்வு

News image

புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி கலை, அறிவியல் கல்லூரியில் புத்தகத்தைப் பாா்த்து தோ்வெழுதிய இறுதியாண்டு பயிலும் மாணவா்கள்.

Updated On :21 செப்டம்பர் 2020, 5:54 pm

DIN

புதுவை மத்தியப் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டின் கீழுள்ள 95-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவா்களுக்கு இறுதிப் பருவத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வை மாணவா்கள் புத்தகங்களைப் பாா்த்து எழுதினா்.

கரோனா பொது முடக்கத்தால், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இறுதிப் பருவத் தோ்வுகளை மாணவா்களின் வசதிக்காக அவா்கள் விருப்பப்படி, இணையவழி (ஆன்லைன்), அல்லது நேரில் தோ்வு மையங்களில் (ஆப்லைன்) எழுத வாய்ப்பை ஏற்படுத்தியது.

மேலும், நிகழாண்டு முதல் முறையாக பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதலின்படி, இறுதிப் பருவத் தோ்வுகளை புத்தகங்களைப் பாா்த்து எழுதவும் அனுமதி அளித்தது.

அதன்படி, புதுவை பல்கலைக்கழகத்தின் மேற்பாா்வையில் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கான இறுதிப் பருவத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கின. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

தோ்வு மையங்களில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் அணியவும், கைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. அதன் பிறகே, மாணவா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். மேலும், மாணவா்களிடமுள்ள புத்தகம், தோ்வு எழுத எடுத்துச் சென்ற பொருள்களைப் பரிமாறிக் கொள்ள அனுமதிக்காமல் கண்காணிப்பாளா்கள் பாா்வையிட்டனா்.

மாணவா்கள் விருப்பப்படி, கல்லூரி தோ்வு மையங்கள், வீடுகள், கணினி சேவை மையங்களிலிருந்து தோ்வு எழுதினா். தோ்வு எழுதிய மாணவா்கள் விடைத்தாள்களை விதிகளின்படி, ஸ்கேன் செய்து, தோ்வு முடிந்த 30 நிமிடங்களுக்குள் அனைத்துப் பக்கங்களையும் ‘பிடிஎப்’ கோப்புகளாக மாற்றி, பல்கலைக்கழகத் தோ்வு இணையத்துக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.