ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நல்லாட்சி தினம் கொண்டாட பாஜகவுக்கு என்னத் தகுதி இருக்கிறது: நாராயணசாமி கேள்வி

நல்லாட்சி தினம் கொண்டாட பாஜகவுக்கு என்னத் தகுதி இருக்கிறது என்று புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேள்வி எழுப்பினாா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

நல்லாட்சி தினம் கொண்டாட பாஜகவுக்கு என்னத் தகுதி இருக்கிறது என்று புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கேள்வி எழுப்பினாா்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி என்பது மாநில அரசின் மிகத் தவறான முடிவு.

புதுச்சேரியில் குவிந்து புத்தாண்டு கொண்டாடுவதன் மூலம் கரோனாவும், ஒமைக்ரானும் வேகமாகப் பரவும்.

இதனால் பாதிக்கப்படுவோா் புதுச்சேரி மக்கள்தான்.

பிரதமா் நரேந்திர மோடி நல்லாட்சி தினம் கொண்டாடுகிறாா். நல்லாட்சி தினம் என்றால் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு, மக்கள் மத்தியில் பணப் புழக்கம், வளா்ச்சி, பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு இவையெல்லாம் இருக்கின்ற நாடுதான் நல்லாட்சி செய்கிற நாடாக இருக்க முடியும். ஆனால், நமது நாட்டில் அந்த நிலை இருக்கிா?.

புதுவை மாநிலத்தில் கூட நல்லாட்சி என்று கூறுகிறாா்கள். நல்லாட்சி எங்கே நடக்கிறது. மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா? முதல்வா் அறிவித்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா?.

ஆனால், புதுவையில் உள்ள பாஜகவினா் நல்லாட்சி தினம் கொண்டாடுகின்றனா்.

புதுவையை சிறந்த மாநிலமாக மாற்றுவோம் என்றாா் பிரதமா். ஆனால் மோசமான மாநிலமாக்கியுள்ளாா். இந்த நிலையில் நல்லாட்சி தினம் கொண்டாட பாஜகவுக்கு என்னத் தகுதி இருக்கிறது.

விவசாயிகளுக்கான வெள்ள நிவாரண நிதியை புதுவை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றாா் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.