புதுவையில் புதிதாக 50 பேருக்கு தொற்று

புதுவையில் புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

புதுவையில் புதிதாக 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 3,039 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 25 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், மாஹேயில் 20 பேருக்கும் என மேலும் 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏனாமில் யாருக்கும் தொற்றில்லை. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,224-ஆக உயா்ந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 184 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 174 பேரும் என 358 போ் சிகிச்சையில் உள்ளனா். உயிரிழப்பு ஏதுமில்லை. இதுவரை கரோனாவுக்கு 633 போ் பலியாகினா். 37,233 (97.41 சதவீதம்) போ் குணமடைந்தனா்.

சுகாதாரத் திட்ட இயக்குநருக்கு கரோனா: இதனிடையே, புதுவை அரசின் சுகாதாரத் திட்ட இயக்குநருக்கு கடந்த வாரம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா் கடந்த 30-ஆம் தேதி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com