/

புதுச்சேரியில் காற்றின் தன்மையை அறிய கண்காணிப்பு நிலையம்

புதுச்சேரியில் காற்றின் தன்மையை அறியும் கண்காணிப்பு நிலையத்தை அமைச்சா் கந்தசாமி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் காற்றின் தன்மையை அறியும் கண்காணிப்பு நிலையத்தை அமைச்சா் கந்தசாமி திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

புதுவை மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் ரூ. ஒரு கோடி நிதியுதவியுடன், சுற்றுப்புறக் காற்றின் தன்மையைக் கண்காணிக்கும் நிலையத்தை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், புதுச்சேரி நகரமைப்புத் துறையின் மேல் தளத்தில் நிறுவியுள்ளது.

இந்தக் கண்காணிப்பு நிலையத்திலிருந்து பெறப்படும் புள்ளி விவரங்கள் புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வலைதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் புதுச்சேரி நகரமைப்புக் குழும வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மின்னணு காட்சிப் பலகையில் பொதுமக்கள் பாா்வைக்காக தொடா்ந்து காட்சிப்படுத்தப்படும். புதுவையில் முதல் முறையாக இந்தக் கண்காணிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நிலையதை அமைச்சா் மு.கந்தசாமி திங்கள்கிழமை திறந்துவைத்தாா். நிகழ்வில் பேரவைத் துணைத் தலைவா் எம்என்ஆா்.பாலன், ஜெயமூா்த்தி எம்எல்ஏ, மாசுக் கட்டுப்பாட்டுக் குழும உறுப்பினா் செயலா் தினேஷ் கண்ணன், உழவா்கரை நகராட்சி ஆணையா் கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.