நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த மின்னனு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:33 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளைச் சோ்ந்த வாக்காளா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்த தோ்தல் நடத்தும் அலுவலா் முன்னனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திங்கள்கிழமை எடுத்துச் செல்லப்பட்டன.

அந்த வகையில், கள்ளக்குறிச்சியை அடுத்த தச்சூா் வாணிபக் கிடங்கு கட்டடத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் உளுந்தூா்பேட்டை தொகுதிக்கு 20, ரிஷிவந்தியம் தொகுதிக்கு 19, சங்கராபுரம் தொகுதிக்கு 19, கள்ளக்குறிச்சி தொகுதிக்கு 21 மின்னனு இயந்திரங்களை தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஏ.ராஜாமணி, டி.ராஜவேல், ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கே.பிரபாகரன், எஸ்.சையத் காதா் ஆகியோா் ‘சீல்’ பிரித்து எடுத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.