அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் அரசு தோல்வி: புதுவையில் மோடி பிரசாரம்

​புதுச்சேரியில் அனைத்துத் துறைகளிலும் முந்தைய காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

News image
Updated On :30 மார்ச் 2021, 2:07 pm

DIN


புதுச்சேரியில் அனைத்துத் துறைகளிலும் முந்தைய காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

புதுச்சேரி கடலூர் சாலையில், நீதிமன்றம் எதிரே உள்ள ஏஎஃப்டி திடலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசார பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. இதில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியது:

"செயல்படாத காங்கிரஸ் அரசின் பட்டியலில் முந்தைய புதுச்சேரி அரசுக்கு தனி இடம் உண்டு. கல்வி, மருத்துவ இடங்களை நிரப்புவது, எஸ்.சி.-எஸ்.டி. நலன் என எந்தத் துறை எடுத்தாலும் அதில் கொள்ளை மட்டும்தான் இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் புதுவை காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளது.

முன்னாள் முதல்வரின் குடும்பத்தினருக்கு நேரடித் தொடர்புடைய ஊழல்கள் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வெளிப்படையாக பேசுகின்றனர்.

அரசியலில் எனக்கு நீண்ட அனுபவம் உள்ளது. எத்தனையோ தேர்தல்களைப் பார்த்துள்ளேன். ஆனால், புதுச்சேரி தேர்தல் தனித்துவமானது. காரணம், ஆட்சியில் இருக்கும் முதல்வருக்கே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பல ஆண்டு விஸ்வாசம், தலைவரின் செருப்பை எடுத்துச் செல்வது, தலைவரைக் கவருவதற்காக தவறாக மொழிபெயர்ப்பது என அனைத்தையும் செய்தும், சீட் கொடுக்கப்படவில்லை. அவருடைய அரசு எத்தகைய பேரழிவு என்பதையே இது தெளிவாக வெளிப்படுத்துகிறது."

இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளான என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பாஜக பொதுச்செயலாளர் செல்வம், பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் நிர்மல் குமார் சுரானா, மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர்கள் ஓம்சக்தி சேகர், அன்பழகன் மற்றும் 30 தொகுதி வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.