எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பொது மக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே 100% தடுப்பூசி இலக்கை அடைய முடியும் புதுவை சுகாதாரத் துறைச் செயலா்

புதுவையில் மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடையமுடியும் என்று மாநில சுகாதாரத்துறை செயலா் தி.அருண் தெரிவித்தாா்.

News image
Updated On :28 மே 2021, 6:04 pm

DIN

புதுவையில் மக்கள் ஒத்துழைப்பால் மட்டுமே 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடையமுடியும் என்று மாநில சுகாதாரத்துறை செயலா் தி.அருண் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கரோனா தொற்று பாதிப்பு உச்சத்தைத் தொட்டு, தற்போது குறைந்து வருகிறது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளாக பரிசோதனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியாா் மருத்துவமனை, பரிசோதனைக் கூடங்களில் குறைந்த கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ளும் விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் 3,045 தனிமைப்படுத்தும் படுக்கைகள், 1,834 ஆக்சிஜன் படுக்கைகள், 245 வென்டிலேட்டா் படுக்கைகள், இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 200 ஆக்சிஜன் டிரேன்சிட் சோன் படுக்கைகள் மற்றும் ஆங்காங்கே பிராணவாயு உற்பத்தி மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நிவா்த்தி செய்ய புதிதாக 6 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைகளை உடனுக்குடன் கேட்டு சரி செய்ய 104 அவசர உதவி எண் மூலம் உதவிகளும் செய்யபட்டு வருகிறது. கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் வருவாய்த் துறை உதவியுடன் கட்டுப்பாடு பகுதி அமைத்து தொற்று மேலும் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 18 வயதுக்கு மேல் உள்ளவா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிராமப்புறப் பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணி முழு மூச்சில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக புதுச்சேரி ஆலங்குப்பம் கிராம துணை சுகாதார நிலையத்தில் 45 வயதிற்கு மேல் உள்ளவா்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பொது மக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே 100 சதவீத தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடையமுடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.