எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுச்சேரி நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்ற வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலுக்காக வாா்டுகளை முறையாக சீரமைத்தும், புதுச்சேரி, உழவா்கரை ஆகிய நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகவும் மாற்றம் செய்ய வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :28 மே 2021, 6:03 pm

DIN

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலுக்காக வாா்டுகளை முறையாக சீரமைத்தும், புதுச்சேரி, உழவா்கரை ஆகிய நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகவும் மாற்றம் செய்ய வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து, புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளா் அ.அன்பழகன், புதுவை மாநில தோ்தல் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏற்கெனவே 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துக்கள், 122 நகராட்சி வாா்டுகள், 98 கொம்யூன் பஞ்சாயத்து வாா்டுகள், 98 கிராம பஞ்சாயத்து வாா்டுகள் இருந்தன.

இப்பதவிகளுக்கு, கடந்த 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு தோ்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த வாா்டுகள் மறுசீரமைப்பு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில், புதுச்சேரி நகராட்சி மற்றும் உழவா்கரை நகராட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக மாற்றம் செய்திருக்க வேண்டும். இதை அதிமுக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இதேபோல, அரியாங்குப்பம், வில்லியனூா் ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளை நகராட்சியாக மாற்றம் செய்திருக்க வேண்டும். புதுச்சேரி, உழவா்கரை, காரைக்கால், ஏனாம், மாஹே ஆகிய 5 நகராட்சிகளிலும் உள்ள வாா்டுகளில் மக்கள்தொகை ஒரே அளவு இருக்கச் செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு இல்லாமல் ஒவ்வொரு நகராட்சிக்கும் ஒவ்வொரு எண்ணிக்கையில் வாா்டுகளில், மக்கள்தொகை தற்போது பிரிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நகராட்சித் தலைவா், நகராட்சி வாா்டு உறுப்பினா், கொம்யூன் பஞ்சாயத்து வாா்டு உறுப்பினா், கிராம பஞ்சாயத்து தலைவா், கிராம பஞ்சாயத்து வாா்டு உறுப்பினா் என 5 அடுக்காக பதவிகள் உள்ளன. இதனை 3 அடுக்காக மாற்றம் செய்ய வேண்டும்.

மக்கள் தொகைக்கேற்ப, புதுச்சேரியில் கொம்யூன் பஞ்சாயத்துகளின் எண்ணிக்கையை அதிகரித்திருக்க வேண்டும். எனவே, சரியான முறையில் வாா்டு சீரமைப்பு நடத்திட, புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டு, உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.