புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.


புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அளித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியிலும் 2 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். மேலும் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நாளை (திங்கள்கிழமை) பள்ளிகள் திறக்கப்படவிருந்தன. அதுவும் தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...