திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுவையில் சட்டப் பரிமாற்ற நாள் விழா

புதுவை இந்தியாவோடு இணைந்த நாளையொட்டி(ஆக.16) கீழூர் நினைவிடத்தில் அமைச்சர் தேனி ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  

News image
Updated On :16 ஆகஸ்ட் 2022, 6:18 am

DIN

புதுச்சேரி: புதுவை இந்தியாவோடு இணைந்த நாளையொட்டி(ஆக.16) கீழூர் நினைவிடத்தில் அமைச்சர் தேனி ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  தொடர்ந்து கீழூர் நினைவு தூணுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு, பிரெஞ்சு ஆட்சியைவிட்டு வெளியேறிய புதுவை பிரதேச மக்கள், கடந்த 1962 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 16 ஆம் தேதி முறைப்படி இந்தியாவுடன் இணைந்தனர். 

Story image

இந்த நாள், ஆண்டுதோறும் புதுவை அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி செவ்வாய்க்கிழமை சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவுடன் புதுச்சேரி இணைவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட இடமான கீழூர் கிராமத்தில் உள்ள நினைவிடத்தில், புதுவை வேளாண் துறை அமைச்சர் தேனி சி.ஜெயக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். 

Story image

புதுவை சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் முன்னிலை வகித்தார். இதனையடுத்து இருவரும் அங்குள்ள நினைவு தூணுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  தியாகிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர், அரசு உயரதிகாரிகள் மற்றும் சுதந்திர போராட்டத் தியாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.