நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

புதுச்சேரியில் கடற்கரை தூய்மை விழிப்புணர்வு: மத்திய அமைச்சர் பங்கேற்பு

புதுச்சேரியில் “கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் கடற்கரை விழிப்புணர்வு பேரணியை மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2022, 10:01 am IST


புதுச்சேரியில் “கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் கடற்கரை விழிப்புணர்வு பேரணியை மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

'தூய்மையான கடற்கரை பாதுகாப்பான கடற்கரை'  பிரசாரத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்துடன் இணைந்து புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் சனிக்கிழமை காலை கடற்கரை தூய்மை பணி விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, “கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி மற்றும் கடற்கரை விழிப்புணர்வு நிகழ்வு" புதுச்சேரி தலைமை செயலகம் எதிரில் கடற்கரையில் சுற்றுச்சூழல், வனத்துறை மத்திய அமைச்சர் பூபேந்தர்யாதவ் தலைமையில் நடைபெற்றது.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடற்கரை தூய்மையை பற்றிய உறுதிமொழியை வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். 

சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், மாநிலங்களவை உறுப்பினர செல்வகணபதி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, அரசுச் செயலர் ஸ்மிதா, மாவட்ட ஆட்சியர் திரு இ. வல்லவன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் "தூய்மையான கடற்கரை பாதுகாப்பான கடற்கரை' என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கடற்கரை விழிப்புணர்வின் நடைப்பயணம் மற்றும் மிதிவண்டி பேரணியை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார். 

தேசிய சேவை திட்டம், தேசிய மாணவர் படை, இந்திய சாரணர் சங்க தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.