தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

குடியரசுத் தலைவர் தேர்தல்: புதுவை வாக்குப்பெட்டி தில்லியில் ஒப்படைப்பு

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான புதுவை வாக்குப்பெட்டி விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

News image
Updated On :19 ஜூலை 2022, 1:11 pm IST

புதுச்சேரி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான புதுவை வாக்குப்பெட்டி விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

புதுவையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட 30 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் எம்பி ஒருவரும் என மொத்தம் 31 பேர் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்து வாக்குப்பட்டிக்கு சீல் வைத்து, அறையில் வைக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று அதிகாலை 1:30 மணி அளவில் வாக்குப்பெட்டி பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குப்பெட்டி ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலரிடம், வாக்குப்பெட்டியை புதுவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முனுசாமி, புதுவை மாநில துணைத் தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் ஆகியோர், சீல் வைக்கப்பட்ட வாக்குபெட்டியும், வாக்குப்பதிவு ஆவணங்களையும் ஒப்படைத்தனர். இதனையடுத்து, ஜூலை 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.