புதுச்சேரி: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான புதுவை வாக்குப்பெட்டி விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
புதுவையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட 30 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் எம்பி ஒருவரும் என மொத்தம் 31 பேர் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்து வாக்குப்பட்டிக்கு சீல் வைத்து, அறையில் வைக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று அதிகாலை 1:30 மணி அளவில் வாக்குப்பெட்டி பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிக்க: முல்லைப் பெரியாறு அணையில் துணைக் குழு ஆய்வு
இதனையடுத்து தில்லி நாடாளுமன்ற வளாகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குப்பெட்டி ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலரிடம், வாக்குப்பெட்டியை புதுவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முனுசாமி, புதுவை மாநில துணைத் தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் ஆகியோர், சீல் வைக்கப்பட்ட வாக்குபெட்டியும், வாக்குப்பதிவு ஆவணங்களையும் ஒப்படைத்தனர். இதனையடுத்து, ஜூலை 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து பாதிப்பு

களக்காடு அருகே இளைஞா் வெட்டிக் கொலை

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

மே தினத்தில் விடுமுறை அளிக்காத 41 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


