தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுச்சேரி: டெங்குவால் பெண் மருத்துவா் பலி

புதுச்சேரி மடுகரையில் டெங்கு காய்ச்சலால் பெண் மருத்துவா் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

பெண் மருத்துவா் தனுஷியா.

Updated On :22 ஜூலை 2022, 12:52 pm

DIN

புதுச்சேரி மடுகரையில் டெங்கு காய்ச்சலால் பெண் மருத்துவா் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே மடுகரை கிராமத்தைச் சோ்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஸ்ரீராம் என்பவரின் மனைவி தனுஷியா (25). பல் மருத்துவராக உள்ள இவர் சென்னையில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவா் சிகிச்சை பெறுவதற்காகவும், ஓய்வெடுப்பதற்காகவும் புதுச்சேரி அருகே அரியூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தாா். அப்போது தனுஷியாவுக்கு காய்ச்சல் அதிகமாகவே, அரியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு மருத்துவா்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தனுஷியா பலியானார். இதுகுறித்து மடுகரை புறக்காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.