வீராம்பட்டினம் செங்கழுநீா் அம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அருகே உள்ள வீராம்பட்டினம் செங்கழுநீா் அம்மன் கோயில் தேர்த் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்த் விழாவையொட்டி, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: கோவில்பட்டி அருகே பட்டியலின மாணவர் மீது தாக்குதல்!
செங்கழுநீா் அம்மன் கோயிலுக்கு வரும் பக்தா்கள் வீராம்பட்டினம் வழியாகவும், கோயிலிலிருந்து செல்பவா்கள் சின்னவீராம்பட்டினம், மணவெளி வழியாக கடலூா்- புதுச்சேரி சாலையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.