மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

புதுச்சேரியில் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்

புதுச்சேரியில் குபேரங்காடியை ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தின் கீழ் சீரமைப்பதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

News image

புதுச்சேரி அண்ணா சாலை நேரு வீதி சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான வியாபாரிகள்.

Updated On :14 ஜூலை 2023, 12:03 pm IST

புதுச்சேரி: புதுச்சேரியில் குபேரங்காடியை ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தின் கீழ் சீரமைப்பதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பெரிய சந்தை எனப்படும் குபேரங்காடியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைப்பதற்கு நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடைகளை இடித்துவிட்டு சீரமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை காலை அண்ணா சாலை நேரு வீதி சந்திப்பில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை நிறுத்தும் வரை தொடர்ந்து போராடுவோம் எனக் கூறி வியாபாரிகள் சாலை மறியலைத் தொடர்ந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 

இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுகட்டாயமாக கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

போலீசாரின் கைது நடவடிக்கையை கண்டித்து பெண் வியாபாரிகளும் மறியலில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் ஆண் வியாபாரிகள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.