லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்காசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

புதுச்சேரி: பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பேரவையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு

புதுச்சேரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் பேரவையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.

News image
புதுச்சேரி பேரவையை முற்றுகையிட முயன்ற ஊழியர்கள்.
Updated On :25 செப்டம்பர் 2023, 6:36 am

DIN

புதுச்சேரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் பேரவையை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு அரசால் நியமிக்கப்பட்ட பொதுப்பணித்துறை ஊழியர்கள் பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என அரசு அறிவித்தது. 

ஆனால் இன்னும் பணி வழங்கப்படவில்லை. அதையடுத்து சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை சட்டப்பேரவையை முற்றுகையிட ஊழியர்கள் ஆண், பெண் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்தனர். அவர்களை மாதா கோயில் தெரு அருகே போலீசார் தடுத்து நிறுத்தினார்.  தடுப்புகளைத் தாண்டி சட்டப்பேரவைக்கு செல்ல அவர்கள் முயற்சித்தனர்.

ஆனால் அவர்களை போலீசார் விடவில்லை. பின்னர் அவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய படி நீண்ட நேரம் அங்கேயே நின்றனர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.