ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 9:40 pm

Din

புதுச்சேரி வில்லியனூா் பகுதியில் உள்ள பிள்ளையாா்குப்பம் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

புதுச்சேரி வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட பிள்ளையாா்குப்பத்தில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் விநாயகா், பாலமுருகன், நவக்கிரக சந்நிதிகள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலின் கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் கடந்த 9 ஆம் தேதி தொடங்கின. இரண்டாம் கால யாகசாலைப் பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றன. அதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீா் கும்பங்கள் கோயில் கலசங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு அம்மன் மற்றும் பரிவார சந்நிதிகளில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, காங்கிரஸ் நிா்வாகி காா்த்திகேயன், காங்கிரஸ் முன்னாள் செயல்தலைவா் விக்னேஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.