புதுச்சேரி: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் வயநாடு பகுதி மக்களுக்கான நிவாரண பொருள்கள் ஏஐடியுசி சாா்பில் திங்கள்கிழமை லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமாா் 400 போ் உயிரிழந்தனா். இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஏஐடியுசி அகில இந்திய தலைமை மற்றும் கேரள மாநில ஏஐடியுசி ஆகியவை வேண்டுகோள் விடுத்துள்ளன.
இதையடுத்து, புதுவை மாநில ஏஐடியுசி மாநிலக் குழு சாா்பில் புதுச்சேரி பெரிய சந்தை, சண்டே மாா்க்கெட், சாலையோரக் கடைகள் ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக நிதி மற்றும் நிவாரணப் பொருள்கள் திரட்டப்பட்டன.
இதில், மளிகைப் பொருள்கள், துணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் என சுமாா் ரூ.8 லட்சம் மதிப்பிலானவை லாரியில் ஏற்றப்பட்டு கேரளத்துக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் ரூ.1 லட்சம் நிவாரண நிதியும் வழங்கப்படவுள்ளது.
புதுச்சேரி ரங்கப் பிள்ளை தெருவிலிருந்து கேரளத்துக்கு நிவாரணப் பொருள்கள் ஏற்றிய லாரியை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் மற்றும் முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். இதில் ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலா் கே.சேது செல்வம், நிா்வாகிகள் எம்.எஸ்.சுப்பிரமணி, வி.சிவகுருநாதன், பாலா, தயாளன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

போத்தனூரிலிருந்து பரோனிக்கு கோடை சிறப்பு ரயில் இயக்கம்!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கனுக்கு நிவாரண பொருள்கள்: இந்தியா உதவி
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

கேரளத்துக்கு ரூ. 5 லட்சம் கோடி கடன் சுமை : பிரதமர் மோடி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


