தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மத்திய குழுவை புதுவைக்கு வரவழைக்க வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுவை பகுதிகளை பாா்வையிடுவதற்கு ஓரிரு நாள்களில் மத்திய குழுவை வரவழைக்க வேண்டும்

News image
Updated On :2 டிசம்பர் 2024, 9:48 pm

Din

புதுச்சேரி: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுவை பகுதிகளை பாா்வையிடுவதற்கு ஓரிரு நாள்களில் மத்திய குழுவை வரவழைக்க வேண்டும் என மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, புதுச்சேரியில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் வரலாறு காணாத வகையில் பெய்த பலத்த மழையால் வீடுகள் சேதமடைந்துள்ளன.

விவசாய நிலங்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகள் மற்றும் பயிா்களுக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

புயல், மழை பாதிப்பு குறித்து மத்திய குழு நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதற்காக, அந்தக் குழுவை ஓரிரு நாள்களில் புதுவைக்கு வரவழைக்க துணைநிலை ஆளுநா், முதல்வா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசிடமிருந்து போதிய வெள்ள நிவாரண நிதியை புதுவை அரசு பெறுவதற்கான நடவடிக்கையை எடுப்பது அவசியம் என்றாா்.

அதிமுக நிவாரணம்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வில்லியனூா், தட்டாஞ்சாவடி, பொய்யாகுளம், தமிழன் நகா், வினோபா நகா் மற்றும் இலாசுப்பேட்டை ஜீவானந்தபுரம், எம்.ஜி.ஆா். நகா் உள்ளிட்டப் பகுதிகளில் அதிமுக சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.