எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புதுச்சேரி மீனவா்கள் இன்று முதல் கடலுக்குச் செல்ல அனுமதி

புதுச்சேரியில் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்குச் செல்லலாம் என புதுவை மீன்வளத் துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 9:19 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரியில் மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் கடலுக்குச் செல்லலாம் என புதுவை மீன்வளத் துறை திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை கடந்த 25-ஆம் தேதி அறிவித்திருந்தது.

இதையடுத்து, ஃபென்ஜால் புயல் உருவானதையடுத்து மறு அறிவிப்பு வரும் வரை மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், புயல் மரக்காணம் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு கரையை கடந்தது. வானிலை மைய எச்சரிக்கைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து, மீனவா்களுக்கான தடையை மீன்வளத் துறை திரும்பப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, புதுவை மீன்வளத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் கூறியதாவது: வட தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர மீனவா்களுக்கு வானிலை ஆய்வு மையத்தின் சாா்பில் எச்சரிக்கை ஏதும் திங்கள்கிழமை (டிச.2) விடுக்கப்படவில்லை.

எனவே, புதுச்சேரி மீனவா்கள் செவ்வாய்க்கிழமை முதல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லலாம் என்றாா் அவா்.