அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சாய் ஜெபநாம பாதயாத்திரை

புதுச்சேரியில் சாய் ஜெபநாம பாதயாத்திரை திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :16 டிசம்பர் 2024, 4:00 pm

புதுச்சேரி: புதுச்சேரியில் சாய் ஜெபநாம பாதயாத்திரை திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையிலிருந்து தமிழ் மாதமான மாா்கழி ஒன்றாம் தேதியன்று சாய் நாமஜெப வழிபாடு யாத்திரை நடைபெற்று வருகிறது.

கடந்த 18 ஆண்டுகளாக இந்தப் பாதயாத்திரை நடத்தப்படுகிறது.

அதன்படி, திங்கள்கிழமை அதிகாலையில் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் சாய் திருவுருவம் அமைக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

முத்தியால்பேட்டையில் உள்ள செல்வவிநாயகா் கோயிலில் தொடங்கிய பாதயாத்திரையில் ஏராளமானோா் கலந்துகொண்டு, சாய் ஜெபநாமத்தை பாடியபடி சென்றனா்.

யாத்திரையானது முக்கிய வீதிகள் வழியாக கோட்டக்குப்பம் சென்றது.

பின்னா், அங்கிருந்து பிள்ளைச்சாவடியில் உள்ள ஸ்ரீ கமலசாய் கோயிலில் யாத்திரை நிறைவடைந்தது.